கட்டுக்கட்டாக பணம் சிக்கிய விவகாரத்தில் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா

நீதிபதி யஷ்வந்த் வர்மா
நீதிபதி யஷ்வந்த் வர்மா
Updated on
1 min read

புதுடெல்லி: கட்​டுக்​கட்​டாக பணம் சிக்​கிய விவகாரத்​தில் அலகா​பாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா பதவியை ராஜி​னாமா செய்​தார்.

டெல்லி உயர் நீதி​மன்ற நீதிப​தி​யாக இருந்​தவர் யஷ்வந்த் வர்​மா. டெல்​லி​யில் இவர் வசித்து வந்த அரசு பங்​களா​வில் கடந்த ஆண்டு மார்ச் 14-ம் தேதி தீ விபத்து ஏற்​பட்​டது. தீயணைப்பு படை​யினர் தீயை அணைக்​கும்​போது வீட்​டின் ஓர் அறையில் பாதி எரிந்த நிலையில் ரூ.500 நோட்​டு​கள் மூட்​டை, மூட்​டையாக கண்​டெடுக்​கப்பட்​டது.

கடும் கண்​டனத்​துக்கு ஆளான வர்மா அப்​பணம் தனக்கு சொந்​த​மானது அல்ல என மறுத்தார். அந்த அறை அனை​வரும் அணுகக்​கூடிய வகை​யில் இருந்​த​தாக அவர் கூறி​னார். இந்த விவ​காரம் குறித்து விசா​ரிக்க 3 நீதிப​தி​கள் கொண்ட குழுவை உச்ச நீதி​மன்​றம் மார்ச் 22-ம் தேதி அமைத்​தது. இக்​குழு தனது அறிக்​கையை அப்​போதைய தலைமை நீதிபதி சஞ்​சீவ் கண்​ணா​விடம் மே 4-ம் தேதி அளித்​தது.

இதையடுத்து வர்​மாவை அலகா​பாத் உயர் நீதி​மன்றத்​துக்கு உச்ச நீதி​மன்​றம் மாற்​றியது. அவருக்கு நீதித்​துறை பணி எது​வும் ஒதுக்க வேண்​டாம் தலைமை நீதிப​தி​யிடம் கேட்​டுக்​கொண்​டது. நீதிபதி வர்​மாவை பதவி​யில் இருந்து நீக்​கு​வதற்​கான பதவி நீக்க நடை​முறை நாடாளுமன்​றத்​தில் கடந்த ஜூலை மாதம் தொடங்​கியது. வர்மா மீதான குற்​றச்​சாட்​டு​களை விசாரிக்க 3 பேர் கொண்ட குழுவை சபா​நாயகர் ஓம்​பிர்லா கடந்த ஆகஸ்ட் மாதம் அமைத்​தார்.

இக்​குழு​வின் அறிக்​கைக்​காக காத்​திருப்​ப​தாக நாடாளு​மன்ற விவ​காரங்​கள் துறை அமைச்​சர் கிரண் ரிஜிஜு கூறி​யிருந்​தார். இந்​நிலை​யில் நீதிபதி யஷ்வந்த் வர்மா தனது பதவியை ராஜி​னாமா செய்​துள்​ளார். இது தொடர்​பாக குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்​முவுக்கு அவர் எழு​தி​யுள்ள கடிதத்​தில், “இந்​தக் கடிதத்தை சமர்ப்​பிக்க என்னை நிர்​பந்​தித்த காரணங்​களைக் கூறி, உங்​கள் மேன்​மைமிகு அலு​வல​கத்​திற்கு சுமையை ஏற்​படுத்த நான் விரும்​ப​வில்லை. ஆழ்ந்த மனவேதனை​யுடன், அலகா​பாத் உயர் நீதி​மன்ற நீதிபதி பதவியி​லிருந்து வில​கு​கிறேன்’’ என்று கூறி​ உள்​ளார்.

வர்மா பதவி வில​கி​யுள்​ள​தால் அவரது பதவி நீக்க நடை​முறை முடிவுக்கு வரும் என மக்​களவை செயலக வட்​டாரங்​கள் தெரி​வித்​தன. மேலும், வர்மா பதவி வில​கி​யிருப்​ப​தால், ஓய்​வூ​தி​யம் மற்​றும் பிற சலுகைகளைப் பெற அவர் தகு​தி​யுடைய​வர் ஆகிறார். நா​டாளு​மன்​றத்​தால் பதவி நீக்​கம் செய்​யப்​பட்​டிருந்​தால்​, இந்​த சலுகைகள்​ அவருக்​கு மறுக்​கப்​பட்​டிருக்​கும்​.

நீதிபதி யஷ்வந்த் வர்மா
ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் பறந்த ரூ.1,700 கோடி மதிப்புள்ள அமெரிக்க ட்ரோன் மாயம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in