Published : 19 Oct 2017 03:16 PM
Last Updated : 19 Oct 2017 03:16 PM
கங்கை உட்பட, 10 ஆறுகளில் இருந்து வெளியேறும் பிளாஸ்டிக் கழிவுகள், 95 சதவீதம் அளவிற்கு கடலை மாசுபடுத்துவது தெரியவந்துள்ளது.
கடலில் டன் கணக்கில் சேரும் பிளாஸ்டிக் கழிவுகள், பெரிய அளவில், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துகின்றன. கடலுக்கு கழிவுகளைக் கொண்டு செல்வதில் ஆறுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இதுபற்றி, ஜெர்மனியைச் சேர்ந்த, சுற்றுச்சுழல் ஆராய்ச்சி மையம் சமீபத்தில் ஆய்வு ஒன்று நடத்தியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தியாவில் ஓடும் கங்கை உட்பட, ஆசியாவில் உள்ள 8 ஆறுகள், ஆப்ரிக்க கண்டத்தைச் சேர்ந்த மேலும், 2 ஆறுகள் என, மொத்தம் 10 ஆறுகள் கொண்டு சேர்க்கும் பிளாஸ்டிக் கழிவுகள், கடலை மிக மோசமாக மாசுபடுத்துகின்றன. இதனால், கடல் மாசுபடுவதுடன், கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்புகளும் ஏற்படுகின்றன.
ஆறுகளில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகள், அதன் வழியாக பயணித்து இறுதியில் கடலில் வந்து குவிகின்றன. இதனால் கடல் மிக மோசமாக மாசுபட்டு, கடல் வாழ் உயிரினங்கள் அழிகின்றன. கடலின் சமநிலை பாதிக்கப்படுகிறது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT