Published : 10 May 2023 05:20 AM
Last Updated : 10 May 2023 05:20 AM

ஹைதராபாத்தில் தீவிரவாத அமைப்பை சேர்ந்த 16 பேர் கைது

ஹைதராபாத்: தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த சிலர் தலைமறைவாக வசிப்பதாக தெலங்கானா மற்றும் மத்தியபிரதேச காவல் துறைக்கு மத்திய உளவு அமைப்பினர் தகவல் கொடுத்தனர்.

இதில் ஒரு வழக்கு தொடர்பாக ஹைதராபாத்தில் பதுங்கியிருக்கும், ஹிஸ்ப்-உத்-தஹ்ரிர் என்ற தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்களை கைது செய்ய போபால் போலீஸார் ஹைதராபாத் வந்தனர். பின்னர் மத்திய உளவு அமைப்பின் உதவியுடன் இரு மாநில போலீஸாரும் கூட்டாக சேர்ந்து ஹைதராபாத்தில் 16 பேரை கைது செய்தனர். இவர்களில் 11 பேர் போபாலை சேர்ந்தவர்கள். மீதமுள்ள 5 பேர் ஹைதராபாத்தை சேர்ந்தவர்கள் ஆவர். தொடர்ந்து இவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x