Published : 14 Sep 2017 08:30 PM
Last Updated : 14 Sep 2017 08:30 PM
எல்லையில் எத்தகைய சவாலையும் எதிர்கொள்ள இந்தியா தயாராக உள்ளது என மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீர் எல்லையில் அவ்வப்போது போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக இந்த மாதத்தில் இதுவரை 3 முறை போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தி உள்ளது. இதனால் அங்கும் பதற்றமான சூழல் நிலவுகிறது.
இந்நிலையில், இது தொடர்பான செய்தியாளர்களின் கேள்விகளுக்கு நிர்மலா சீதாராமன் கூறும்போது, ''எல்லையில் நிகழும் அனைத்து சம்பவங்களையும் ராணுவமும் மத்திய அரசும் உன்னிப்பாக கவனித்து வருகிறது. எத்தகைய சவாலையும் எதிர்கொள்ளும் திறன் நமக்கு உள்ளது என்பதையும் அதற்காக நமது ராணுவ வீரர்கள் தயாராக உள்ளனர் என்றும் பொதுமக்களுக்கு உறுதி அளிக்கிறேன்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT