Published : 26 Sep 2017 12:29 PM
Last Updated : 26 Sep 2017 12:29 PM
காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டருகே ஊடுருவிய தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை அன்று வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள உரி பகுதியில் நடந்துள்ளது.
இதுகுறித்துப் பேசிய ராணுவ அதிகாரி, ''உரி பகுதியில் சோரவர் என்ற இடத்தில் தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றனர். அப்போது நடந்த என்கவுன்ட்டர் தாக்குதலில் தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டார்.
என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் இருந்து ஓர் ஆயுதம் கைப்பற்றப்பட்டுள்ளது. இன்னும் தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT