Published : 07 Sep 2017 12:51 PM
Last Updated : 07 Sep 2017 12:51 PM
நாட்டின் முதல் முழுநேர பெண் பாதுகாப்பு அமைச்சராக நிர்மலா சீதாராமன் இன்று (வியாழக்கிழமை) பொறுப்பேறுக்கொண்டார். பாதுகாப்பு அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கர் கோவா மாநில முதல்வராக்கப்பட்டதால் பாதுகாப்பு அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
அதன் பின்னர் அந்தப் பதவி, கூடுதல் பொறுப்பாக நிதியமைச்சர் அருண் ஜேட்லியிடன் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப்.3-ம் தேதி) மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. 4 இணை அமைச்சர்கள் கேபினட் அமைச்சர்களாக அந்தஸ்து பெற்றனர். அவர்களில் நிர்மலா சீதாராமனுக்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று அவர் முறைப்படி பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, பாதுகாப்புத் துறை மூத்த அதிகாரிகள் சிலர் உடன் இருந்தனர். நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்றுக் கொள்வதற்கு முன்னதாக அறையில் புரோகிதர் ஒருவர் பூஜை செய்தார்.
பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் சிறு ஆலோசனையில் அவர் ஈடுபட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT