Published : 12 Sep 2017 09:42 AM
Last Updated : 12 Sep 2017 09:42 AM

காரவி, சாஞ்சி, தாரவி: 3 பெண் குழந்தைகளுக்கு ஜிஎஸ்டி எழுத்தில் பெயர்: வரி சீர்திருந்த நடவடிக்கையால் ஈர்க்கப்பட்ட குஜராத் பெண் முடிவு

மத்திய அரசின் வரி சீர்திருத்த நடவடிக்கையால் ஈர்க்கப்பட்டுள்ள ஒரு பெண், தனது 3 பெண் குழந்தைகளுக்கு ஜி, எஸ், டி ஆகிய எழுத்துகளில் தொடங்கும் வகையில் பெயர் வைத்துள்ளார்.

இதுகுறித்து குஜராத் மாநிலம் சூரத் நகரைச் சேர்ந்த காஞ்சன் படேல் கூறும்போது, “நாடு முழுவதும் ஜிஎஸ்டி என்ற ஒரே வரித் திட்டம் என்னை வெகுவாக கவர்ந்தது. இதையடுத்து எனது 3 பெண் குழந்தைகளுக்கு ஜிஎஸ்டி (காரவி, சாஞ்சி, தாரவி) என்ற எழுத்தில் தொடங்கும் பெயர்களை வைத்துள்ளேன்” என்றார்.

ஜிஎஸ்டி வரி விதிப்பு திட்டம் அமலுக்கு வந்த அன்றே ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தம்பதி, தங்களது பெண் குழந்தைக்கு ஜிஎஸ்டி என பெயர் வைத்தனர். இதுபோல சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியும் ஜிஎஸ்டி அமலுக்கு வந்த மறு நாளே தங்களது குழந்தைக்கு ஜிஎஸ்டி என பெயர் வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x