Published : 29 Sep 2017 11:41 AM
Last Updated : 29 Sep 2017 11:41 AM
‘துப்புரவு மேற்பார்வையாளர்’ பணி தொடர்பாக சிறுபான்மையின இளைஞர்களுக்கு பயிற்சியளிக்க நாடு முழுவதும் 100 மையங்கள் அமைக்கப்படும் என்று சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டெல்லியில் நேற்று அவர் கூறியதாவது: சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் நாடு முழுவதும் 100 இடங்களில் ‘கரீப் நவாஸ்’ என்ற பெயரில் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த மையங்களில் ஏழை சிறுபான்மையின இளைஞர்களுக்கு ‘துப்புரவு மேற்பார்வையாளர்’ பணிக்கான பயிற்சி அளிக்கப்படும். இதில் நவீன இயந்திரங்கள் உதவியுடன் குப்பைகளை அகற்றுதல், குப்பைகளில் இருந்து உரம் தயாரித்தல் உட்பட பல பயிற்சிகள் இடம்பெறும். இதன்மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அதேநேரம் ‘தூய்மை இந்தியா’ திட்டம் விரிவடையும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT