Published : 23 Sep 2017 09:36 AM
Last Updated : 23 Sep 2017 09:36 AM
ரயில்வே ஹோட்டல்கள் குத்தகை ஊழல் வழக்கில் ஆஜராகும்படி ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், அவரது மகன் தேஜஸ்வி யாதவுக்கு சிபிஐ புதிய சம்மன் அனுப்பியுள்ளது.
இதில் லாலு வரும் 25-ம் தேதியும் தேஜஸ்வி 26-ம் தேதியும் ஆஜராகும்படி கூறப்பட்டுள்ளது. முன்னதாக இருவரும் கடந்த 11, 12 ஆகிய தேதிகளில் ஆஜராகும்படி கூறப்பட்டுள்ளனர். ஆனால் வழக்கு ஒன்றில் ஆஜராக ராஞ்சி செல்ல வேண்டும் என்று கூறி லாலு ஆஜராகவில்லை. தேஜஸ்வியும் ஆஜராகவில்லை. இந்நிலையில் சிபிஐ புதிய சம்மன் அனுப்பியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT