Published : 04 Sep 2017 10:56 AM
Last Updated : 04 Sep 2017 10:56 AM
காஷ்மீரில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய பகுதிகள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாடு கோடு அருகே கிருஷ்ண காட்டி செக்டார் பகுதியில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்று தாக்குதல் நடத்தினர். காலை 8.50 மணி முதல் 10 மணி வரை இந்த தாக்குதல் நடந்தது. துப்பாக்கியால் சுட்டும் சிறிய ரக பீரங்கிகள் மூலமும் தாக்குதல் நடத்தினர். இதற்கு இந்திய ராணுவத்தினர் கடுமையான பதிலடி கொடுத்தனர். பாகிஸ்தான் பகுதிகளை நோக்கி தாக்குதல் நடத்தினர்.
இத்தகவலை ராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்துவது இந்த மாதத்தில் இது இரண்டாவது முறையாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT