Published : 02 Mar 2023 04:34 AM
Last Updated : 02 Mar 2023 04:34 AM

3 ஆண்டுகளில் 245 யானைகளை இழந்த ஒடிசா மாநிலம்

புவனேஸ்வர்: ஒடிசா சட்டப்பேரவையில் எம்எல்ஏ சவும்யா ரஞ்சன் பட்நாயக் எழுப்பிய கேள்விக்கு வனத்துறை அமைச்சர் பிரதீப் அமத் அளித்த பதில் வருமாறு: கடந்த 2019-20 முதல் 2021-22 வரையிலான 3 ஆண்டுகளில் 245 யானைகளை ஒடிசா இழந்துள்ளது. இதில் 6 யானைகள் வேட்டைக்காரர்களால் கொல்லப் பட்டுள்ளன. மூன்று ஆண்டுகளில் 43 வேட்டைக்காரர்கள் கைது செய்யப்பட்டு, 39 தந்தங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு அமைச்சர் பிரதீப் அமத் கூறினார்.

வனவிலங்கு ஆர்வலர்கள் கூறும்போது, “வேட்டைக்காரர் ஒருவரும் முறைகேட்டை அம்பலப்படுத்திய வரும் கொல்லப்பட்ட வழக்கில் 9 வன ஊழியர்கள் கைது செய்யப்பட்டிருப்பது வனப் படையை மேலும் மதிப்பிழக்கச் செய்துள்ளது’’ என்று தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x