Published : 28 Feb 2023 04:34 AM
Last Updated : 28 Feb 2023 04:34 AM

இமாச்சலில் சுற்றுலாவை மேம்படுத்த 8 ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்க முடிவு

ஹமிர்புர்: சுற்றுலாத் துறையை மேம்படுத்த நடப்பாண்டில் 5 ஹெலிகாப்டர் இறங்குதளங்கள் (ஹெலிபோர்ட்ஸ்) அமைக்கப்படும் என இமாச்சல பிரதேச அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியது: இமாச்சல பிரதேசத்தில் தற்போதுள்ள 5 ஹெலிபோர்ட்களில் மூன்று வணிக ரீதியில் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கு போதுமான ஹெலிபோர்ட்ஸ் வசதி மாநிலத்தில் இல்லை. இதனை உணர்ந்து சுற்றுலாவை மேம்படுத்தவும், பொருளாதாரத்தை ஊக்குவிக்கவும் மேலும் 8 ஹெலிபோர்ட்களை அமைக்க மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் அமையவுள்ள இந்த ஹெலிபோர்ட்களுக்கான கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x