Published : 17 Feb 2023 05:03 AM
Last Updated : 17 Feb 2023 05:03 AM

ம.பி.யில் 16 ஆயிரம் அரசு மருத்துவர்கள் 2 மணி நேர வேலைநிறுத்தம்

போபால்: மத்திய பிரதேசத்தில் சுமார் 16,000 அரசு மருத்துவர்கள் நேற்று 2 மணி நேர வேலைநிறுத்தம் மேற்கொண்டனர்.

அன்றாட பணிகள் மற்றும் பதவி உயர்வில் அதிகாரவர்க்க தலையீடு இருப்பதாக கூறி அவர்கள் போராட்டம் மேற்கொண்டனர்.

கோரிக்கைகளுக்கு அரசு தீர்வு காணாவிடில் இன்று (பிப். 17) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்போவதாக அவர்கள் எச்சரித்தனர்.

அரசு மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களை சேர்ந்த மருத்துவர்கள் காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை வேலைநிறுத்தம் மேற்கொண்டதாக போராட்டத்துக்கு தலைமை வகிக்கும் மருத்துவர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x