Published : 17 Dec 2016 09:24 AM
Last Updated : 17 Dec 2016 09:24 AM

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நேற்று நிறைவு பெற்றது. பணமதிப்பு நீக்க நடவடிக்கை காரணமாக இந்த கூட்டத்தொடர் முழுவதும் முடங்கியது.

குளிர்கால கூட்டத்தொடரின் கடைசி நாளான நேற்றும் மக்களவை, மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் இரு அவைகளும் முடங்கின.

மக்களவையில் எதிர்க்கட்சி களின் அமளியால் நண்பகல் வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகலில் மீண்டும் அவை கூடியபோது தொடர்ந்து அமளி ஏற்பட்டது. எனவே சபாநாயகர் சுமித்ரா மகாஜன், மக்களவையை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.

மாநிலங்களவைத் தலைவர் ஹமீது அன்சாரி அவையில் பேசியபோது, அதிருப்தியை வெளிப்படுத்துவதற்கும் இடை யூறு செய்வதற்கும் இடையே யான வேறுபாடு குறித்து உறுப்பினர்கள் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம். கூட்டத்தொடர் முழு வதும் வீணடிக்கப்பட்டது மிகுந்த வேதனையளிக்கிறது என்று தெரி வித்தார். மாநிலங்களவையும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக் கப்பட்டது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இரு அவை களிலும் சுமார் 80 சதவீத நேரம் வீணடிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x