Published : 27 Dec 2016 09:43 AM
Last Updated : 27 Dec 2016 09:43 AM

டிச. 30-க்கு பிறகு பழைய நோட்டு வைத்திருப்பவர்களுக்கு அபராதம்: அவசரச் சட்டம் பிறப்பிக்க திட்டம்

செல்லாது என அறிவிக்கப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 30-ம் தேதிக்கு பிறகு வைத்திருப்பவர்களுக்கு அபராதம் விதிக்க வகை செய்யும் அவசரச் சட்டம் பிறப்பிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

செல்லாது என 500, 1000 ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 30-ம் தேதி வரை வங்கிகளில் செலுத்தலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் 30-ம் தேதிக்கு பிறகு பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை ஒவ்வொன்றிலும் 10 தாள்களுக்கு மேல் வைத்திருப்பது குற்றமாக கருதப்படும்.

இவ்வாறு வைத்திருப்பவர்க ளுக்கு குறைந்தபட்சம் ரூ.50 ஆயிரம் அல்லது வைத்திருக்கும் தொகையில் 5 மடங்கு இவற்றில் எது அதிகமோ அத்தொகை அபராதமாக விதிக்கப்படும் என கூறப்படுகிறது. வரும் புதன்கிழமை நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

டிசம்பர் 30-க்கு பிறகு பழைய ரூபாய் நோட்டுகளை மார்ச் 31 வரை ரிசர்வ் வங்கியில் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. என்றாலும் இந்த காலக்கெடு குறைக்கப்படலாம் என்றும் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x