Published : 20 Jan 2023 05:36 AM
Last Updated : 20 Jan 2023 05:36 AM

தேசிய பேரிடர் மீட்பு படை எழுச்சி தினம் - பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

புதுடெல்லி: தேசிய பேரிடர் மீட்பு படை (என்டிஆர்எப்) எழுச்சி தினம் ஆண்டுதோறும் ஜன.19-ம் தேதி கொண்டாடப்படுகிறது.

இப்படையின் 17-வது எழுச்சி தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “என்டிஆர்எப் வீரர்களுக்கு எழுச்சி நாள் வாழ்த்துகள். மிகவும் சவாலான சூழ்நிலைகளில் மக்களுக்கு உதவிட மிகவும் பாராட்டுக்குரிய பணிகளை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அவர்களின் துணிச்சல் போற்றத்தக்கது. பேரிடரை தாங்கும் உட்கட்டமைப்பை உருவாக்கிடவும் பேரிடர் மேலாண்மை சாதனங்களை வலுப்படுத்தவும் இந்தியா பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது” என்று கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x