Published : 05 Dec 2016 09:06 AM
Last Updated : 05 Dec 2016 09:06 AM
டெல்லியில் கடுமையான பனி மூட்டம் காரணமாக, நேற்று காலை 13 ரயில்கள் ரத்தானது. 88 ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.
இதுகுறித்து வடக்கு ரயில்வே அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘வட இந்தியா முழுவதும் ஞாயிற்றுக்கிழமையன்று, கடும் பனி மூட்டம் காணப்பட்டது. ரயில் களைத் திட்டமிட்டபடி இயக்க முடியவில்லை. புவனேஸ்வர் ராஜ்தானி (22823) எக்ஸ்பிரஸ் 22 மணி நேரம் தாமதமானது. பூர்வா எக்ஸ்பிரஸ் 29 மணி நேர தாமதமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
2 மணி நேரத்துக்கும் அதிக மான கால தாமதத்தால், சுமார் 88 ரயில்களின் சேவை பாதிக் கப்பட்டுள்ளது. பாட்னா ராஜ்தானி, சம்பூர்ண கிராந்தி, புவனேஸ்வர் ராஜ்தானி உள்ளிட்ட 13 ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டன’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT