Last Updated : 22 Dec, 2016 09:10 PM

 

Published : 22 Dec 2016 09:10 PM
Last Updated : 22 Dec 2016 09:10 PM

ம.பி.யில் 2000 ரூபாய் நோட்டுகளை போலியாக அச்சடித்த 2 பேர் கைது

மத்தியப் பிரதேச மாநிலம் சதர்பூரில் 2000 ரூபாய் நோட்டுகளை போலியாக அச்சடித்த 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த மாதம் 8-ம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். இதையடுத்து புதிய 2000 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டன. இந்த நடவடிக்கைக்குப் பிறகு பல்வேறு இடங்களில் திடீர் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இதில் கத்தை கத்தையாக புதிய மற்றும் பழைய ரூபாய் நோட்டுகள், தங்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சதர்பூரின் லவ்குஷ்நகரில் நடைபெற்ற சோதனையில் வண்ண அச்சு இயந்திரத்தைப் பயன்படுத்தி 2000 ரூபாய் நோட்டுகளை அச்சடித்த 2 பேரை போலீஸார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான போலி ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x