Published : 24 Dec 2022 05:22 AM
Last Updated : 24 Dec 2022 05:22 AM

செங்கல் தொழிற்சாலை புகைப்போக்கி மீது மின்னல் தாக்கி 9 தொழிலாளர்கள் உயிரிழப்பு

மோதிஹாரி: பிஹாரில் செங்கல் தொழிற்சாலை புகைப்போக்கி மீது மின்னல் தாக்கி இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் காயமடைந்தனர்.

பிஹார் மாநிலம் கிழக்கு சம்பரன் மாவட்டம் மோதிஹாரி நகருக்கு அருகே ராம்கர்வா பகுதி உள்ளது. இங்குள்ள நரிர்கிர் பகுதியில் அமைந்துள்ள செங்கல் தொழிற்சாலையில் நேற்று 25-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

நேற்று மாலை திடீரென புகைப்போக்கி மீது மின்னல் தாக்கியதால் பெரும் வெடிச்சத்தம் கேட்டது. சத்தம் கேட்டதும் தொழிலாளர்கள் அங்கிருந்து அலறியடித்துக் கொண்டு ஓடினர். அப்போது புகைப்போக்கி கீழே விழுந்ததில் 9 பேர் சிக்கி உயிரிழந்தனர். 15 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அந்த இடிபாடுகளுக்குள் மேலும் சில தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டுள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் போலீஸாரும், தீயணைப்புப் படையினரும் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விபத்தில் தொழிற்சாலையின் உரிமையாளரும் காயமடைந்துள்ளார். மீட்புப் பணிகளை மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மேற்பார்வையிட்டு வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x