Last Updated : 12 Dec, 2016 11:00 AM

 

Published : 12 Dec 2016 11:00 AM
Last Updated : 12 Dec 2016 11:00 AM

ஹெலிகாப்டர் விபத்தில் ஒருவர் பலி

மும்பை அருகே ஹெலிகாப்டர் நொறுங்கி தீப்பிடித்து விழுந்ததில், ஒருவர் பலியானார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள ஆரே காலனி. இங்கு ஒரு ஹெலிகாப்டர் நேற்று காலை 11.45 மணிக்கு வானில் பறந்து கொண்டிருந்தது. திடீரென தீப்பிடித்து எரிந்து கீழே விழுந்து நொறுங்கியது. பொதுமக்கள் அதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக போலீஸுக்கும் தீயணைப்புப் படையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

அவர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு ஹெலிகாப்டரில் சென்ற 4 பேர் தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர். அவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அதற்குள் ஒருவர் இறந்துவிட்டார். 3 பேர் படு காயங்களுடன் மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து வேறு விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x