Published : 15 Dec 2016 10:14 AM
Last Updated : 15 Dec 2016 10:14 AM

இரு தொகுதிகளில் போட்டியிட தடை விதிக்க வேண்டும்: தேர்தல் ஆணையம் பரிந்துரை

ஒரு வேட்பாளர் இரு தொகுதிகளில் போட்டியிட தடை விதிக்க மத்திய அரசிடம் தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

இந்நிலையில் தேர்தல் சீர் திருத்தம் தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையம் பல்வேறு யோசனைகளை சட்ட அமைச்சகத் துக்கு அனுப்பி வைத்துள்ளது.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத் தின் 33(7) வது பிரிவில் ஒரு திருத்தத்தை ஆணையம் முன் வைத்துள்ளது. ஒரு தொகுதிக்கு மேல் ஒரு வேட்பாளர் போட்டி யிடுவதற்கு தடை விதிக்க வேண் டும். இல்லையெனில் 2 தொகுதி களில் வெற்றி பெறும் வேட்பாளர் ராஜினாமா செய்யும் தொகுதிக் கான இடைத்தேர்தல் செலவை அவரே ஏற்பதை கட்டாயமாக்க வேண்டும்.

இதுதொடர்பாக கடந்த 2004-ம் ஆண்டிலேயே மத்திய அரசிடம் தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. அப்போது சட்டப் பேரவைத் தேர்தல், மேலவைத் தேர்தலாக இருந்தால் ரூ. 5 லட்சம், மக்களவைத் தேர்தலாக இருந்தால் ரூ.10 லட்சம் என ஆணையம் யோசனை தெரிவித் திருந்தது.

இப்போதைய காலநிலை மைக்கு ஏற்ப தேர்தல் செலவை உயர்த்தி நிர்ணயிக்க வேண்டும். இந்த நடவடிக்கை ஒரு வேட்பாளர் இரு தொகுதிகளில் போட்டியிடுவதை யோசிக்க வைக்கும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x