Published : 16 Nov 2016 07:40 AM
Last Updated : 16 Nov 2016 07:40 AM
வரும் 2017-18-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்படும் என்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது. பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி மாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி மாதம் பட்ஜெட் தாக்கல் செய்வதன் மூலம் பட்ஜெட் தொடர்பான விவாதம் நடத்தப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்ய முடியும். இதனால் நிதி ஆண்டு தொடங்கும் ஏப்ரல் மாதம் அந்தந்த திட்டங்களுக்கு உரிய நிதியைப் பயன்படுத்த முடியும். இதற்கு வசதியாக பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கு கிறது. இந்நிலையில் குளிர்கால கூட்டத் தொடருக்கு ஒருநாள் முன்னதாக பட்ஜெட் தாக்கல் குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
பட்ஜெட் தாக்கல் செய்தவுடன் அதன் மீதான விவாதம் நடத்தப் பட்டு, செலவு அனுமதி கோரிக்கை வாக்கெடுப்பு (Vote on Account) நடத்தப்பட வேண்டும். பிப்ரவரி மாத இறுதியில் தாக்கல் செய்யப்படுவ தால் திட்டங்களுக்கான நிதி ஒதுக் கீடு மே மாதம் வரை செல்வதால் பட்ஜெட் தாக்கல் செய்வதை முன்கூட்டியே நிறைவேற்றப் போவ தாக அரசு அறிவித்து வந்தது.
ஏற்கெனவே மத்திய பட்ஜெட் டுடன் ரயில்வே பட்ஜெட்டும் சேர்க்கப்பட்டுவிட்டது. இதனால் ரயில்வே துறைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்வதும் இனி இருக்காது. இத்தகைய சூழலில் ஒரே பட்ஜெட்டை பிப்ரவரி 1-ம் தேதி மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ளது.
92 ஆண்டுகாலம் பின்பற்றப்பட்டு வந்த நடைமுறைகள் இதன் மூலம் மாற்றப்பட்டுள்ளன. முதலாவதாக ரயில்வே பட்ஜெட்டும், பொது பட்ஜெட்டும் ஒன்றாக இணைக் கப்பட்டுள்ளன. திட்டச் செலவு மற்றும் திட்டம் சாரா செலவு என்ற இரண்டுவித அறிவிப்புகள் ஒன்றாக் கப்பட்டுள்ளன. அதேபோல பட்ஜெட் தாக்கல் செய்வதும் முன் கூட்டியே நடத்தப்படுகிறது. இதன் மூலம் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தி லிருந்து பின்பற்றப்பட்டு வந்த மரபு களில் மூன்றில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நிதி ஆண்டின் தொடக்கமான ஏப்ரல் 1, 2017-ல் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பும் (ஜிஎஸ்டி) அமலுக்கு வர உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT