Published : 08 Nov 2016 09:35 AM
Last Updated : 08 Nov 2016 09:35 AM
சொராபுதீன் ஷேக் போலி என்கவுன்ட்டர் வழக்கில் இருந்து பாஜக தேசிய தலைவர் அமித் ஷா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.
சமூக ஆர்வலர் ஹர்ஷ் மந்தர் தாக்கல் செய்த இந்த சீராய்வு மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே மற்றும் அசோக் பூஷண் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை ஆராய்ந்த நீதிபதிகள் ‘‘கடந்த அக்டோபர் 19-ம் தேதி இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் எந்த தவறும் காணப்படவில்லை. எனவே இந்த சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’’ என உத்தரவிட்டனர்.
ஏற்கெனவே மும்பை உயர் நீதிமன்றமும், சொரபுதீன் என் கவுன்ட்டரில் அமித் ஷாவுக்குத் தொடர்பு இல்லை என தீர்ப்பளித் திருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT