Published : 21 Sep 2022 10:38 AM
Last Updated : 21 Sep 2022 10:38 AM

டெல்லியில் வேகமாக ஓடிய டிரக் மோதியதில் சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த 4 பேர் பலி

புதுடெல்லி: டெல்லியில் வேகமாக ஓடிய டிரக் ஒன்று சாலைத் தடுப்பில் பாய்ந்ததில் அங்கு தூங்கிக் கொண்டிருந்தவர்களில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். டெல்லி சீமாபுரியில் நேற்றிரவு இச்சம்பவம் நடந்துள்ளது. டெல்லி போக்குவரத்துக் கழக பேருந்து டிப்போ அருகே உள்ள பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது.

இந்த விபத்தில், கரீம் 52, சோட்டே கான் 25, ஷா ஆலம் 38, ராஹு 45 ஆகியோர் உயிரிழந்தனர். மணீஷ் 16, பிரதீப் 30 ஆகியோர் காயமடைந்தனர்.

டிரக்கை ஓட்டிவந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடினார். அவரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x