Published : 09 Nov 2016 08:33 AM
Last Updated : 09 Nov 2016 08:33 AM

ரூ.2,019 கோடி விவசாயக் கடன் தள்ளுபடி: தெலங்கானா விவசாயிகள் மகிழ்ச்சி

தெலங்கானா அரசு 3-வது கட்டமாக ரூ.2,019 கோடி விவசாயக் கடனை நேற்று ரத்து செய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த 2014-ம் ஆண்டு தெலங் கானா மாநிலத்தில் முதல் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற்றது. அப்போது, ஆட்சிக்கு வந்தால் விவசாயக் கடனை ரத்து செய்வோம் என தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி வாக்குறுதி அளித்தது. தேர்தலில் இக்கட்சி ஆட்சியைப் பிடித்து, கே.சந்திரசேகர ராவ் முதல்வர் ஆனார்.

தேர்தல் வாக்குறுதிப்படி மொத்தம் ரூ.17 ஆயிரம் கோடி விவசாயக் கடனை தெலங்கானா அரசு ரத்து செய்ய வேண்டி உள்ளது. இதன்மூலம் 36 ஆயிரம் விவசாயிகள் பயன் அடைவர். இதன்படி,முதற்கட்டமாக ரூ.4,250 கோடி விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு 2-ம் கட்டமாக மேலும் ரூ.4,250 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போது 2016-17 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் 3-வது கட்டமாக மேலும் ரூ.2,019 கோடி கடனை தள்ளுபடி செய்வதாக அம்மாநில அரசு நேற்று அறிவித்தது.

மீதம் உள்ள கடன் அடுத்த ஆண்டில் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்துள்ளது. எதிர்க் கட்சியினர், தொடர்ந்து விவசாய கடன் தள்ளுபடி குறித்த சர்ச்சையை எழுப்பியதால் முதல்வர் கே.சந்திரசேகர ராவ் இந்த நடவடிக் கையை எடுத்துள்ளதாகக் கூறப்படு கிறது. இதனால் தெலங்கானா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந் துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x