Published : 21 Oct 2016 09:58 AM
Last Updated : 21 Oct 2016 09:58 AM
கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் தாமாக முன்வந்து அறிவிக்கும் திட்டம் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி முடிவடைந்தது.
இதைத் தொடர்ந்து சந்தேகத்துக்கு உரியவர்களின் வீடு, அலுவல கங்களில் வருமான வரித்துறை யினர் சோதனை நடத்த தொடங்கி யுள்ளனர்.
அந்த வகையில் தெற்கு டெல்லியில் வசிக்கும் ஒரு வழக்கறிஞரின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அண்மை யில் சோதனை நடத்தினர். அவரிடம் ரூ.125 கோடி மதிப்புள்ள கருப்பு பணம், சொத்து இருப்பது கண்டறியப்பட்டது. இது வருமான வரித்துறை அதிகாரிகளையே அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
அந்த வழக்கறிஞர் டெல்லி யின் மையப்பகுதியில் அண்மை யில் ரூ.100 கோடிக்கு சொகுசு வீட்டை வாங்கினார். ஷெல் நிறு வனத்திலும் மிகப் பெரிய தொகையை முதலீடு செய்துள் ளார். இதைத் தொடர்ந்து அவரை வருமான வரித்துறையினர் ரகசியமாக கண்காணித்து பிடித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT