Last Updated : 18 Oct, 2016 05:17 PM

 

Published : 18 Oct 2016 05:17 PM
Last Updated : 18 Oct 2016 05:17 PM

சத்தீஸ்கரில் போலீஸார் தேடுதல் வேட்டை: மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளுக்கும் போலீஸாருக்கும் இடையே நடந்த சண்டையில் மாவோயிஸ்ட் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து சுக்மா மாவட்டத்தின் கிராமவாசிகள், "திங்கட்கிழமை நள்ளிரவில் சுக்மா மாவட்டத்திலுள்ள பள்ளியில் ஆயுதம் ஏந்திய ஆறு நபர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே கடுமையான சண்டை நடந்தது" என்று கூறினர்.

சத்தீஸ்கர் போலீஸ் அதிகாரி கூறும்போது, "மாவோயிஸ்டுகளுக்கு எதிரான இந்தத் தேடுதல் வேட்டையில் மாவோயிஸ்ட் தரப்பில் ஒருவர் கொல்லப்பட்டார். அவரிடமிருந்த இரு துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தேடுதல் வேட்டை தொடரும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x