Published : 24 Aug 2022 06:20 AM
Last Updated : 24 Aug 2022 06:20 AM

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுடன் காங். தலைவர் சோனியா காந்தி சந்திப்பு

புதுடெல்லி: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை, காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி நேற்று சந்தித்துப் பேசினார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் ஆளுநராக இருந்த திரவுபதி முர்மு நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக கடந்த மாதம் 25-ம் தேதி பதவியேற்றார். இதைத் தொடர்ந்து திரவுபதி முர்முவை பல்வேறு மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், அதிகாரிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவரான சோனியா காந்தி, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை டெல்லியில் நேற்று நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட முர்முவுக்கு, சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்தார்.

இருவரும் சந்தித்த புகைப்படத்தை வெளியிட்டுள்ள குடியரசுத் தலைவர் மாளிகை, இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என தெரிவித்துள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அண்மையில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தார். தற்போது தொற்று சரியான நிலையில் அவர் குடியரசுத் தலைவர் முர்முவைச் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x