Published : 17 Oct 2016 09:34 AM
Last Updated : 17 Oct 2016 09:34 AM

ரூ.200 கோடி பாம்பு விஷம் மேற்குவங்கத்தில் பறிமுதல்

மேற்குவங்கத்தில் ரூ.200 கோடி மதிப்புள்ள பாம்பு விஷம் பறிமுதல் செய்யப்பட்டது.

வெளிநாடுகளில் இருந்து மேற்குவங்கத்துக்கு பாம்பு விஷம் கடத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக அந்த மாநில வனத்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

கடந்த ஜூனில் சிலிகுரி பகுதியில் ரூ.100 கோடி மதிப்புள்ள பாம்பு விஷம் பறிமுதல் செய் யப்பட்டது. இதைத் தொடர்ந்து அண்மையில் பிரான்ஸில் இருந்து வங்கதேசம் வழியாக மேற்குவங்கத்துக்குப் பாம்பு விஷம் கடத்தப்பட்டிருப்பதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் வனத்துறை அதிகாரிகள், பாம்பு விஷத்தை வாங்கும் வியாபாரிகள் போல நடித்துக் கடந்த 14-ம் தேதி சிலிகுரி பகுதியில் 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.200 கோடி மதிப்புள்ள பாம்பு விஷம் பறிமுதல் செய்யப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x