Published : 03 May 2016 08:49 AM
Last Updated : 03 May 2016 08:49 AM
உலகின் மிகப்பெரிய தொலை நோக்கி டிஎம்டி, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் லடாக்கில் அமைய வாய்ப்பு உருவாகியுள்ளது.
‘தர்ட்டி மீட்டர் டெலஸ்கோப்’ (டிஎம்டி) என்ற பெயரில் உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியை ஹவாய் தீவுகளில் உள்ள மவுனா கீயா பகுதியில் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல்வேறு நாடுகளின் கூட்டுப் பங்களிப்பில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கான நிலம் பெறப்பட்டு பணிகள் கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கப்பட இருந்தது. ஆனால், ஹவாய் மக்களின் தொடர் எதிர்ப்பு மற்றும் போராட்டத்தால் இத்திட்டம் கைவிடப்பட்டது. ஹவாய் உச்ச நீதிமன்றமும் இக்கட்டுமானத்துக்கு அளிக்கப்பட்ட அனுமதியை திரும்பப் பெற்று விட்டது.
இருப்பினும் மவுனா கீயாவில் இத்திட்டத்தை தொடர்வதற்கான வாய்ப்புகளை முயன்று வருவதாக திட்ட இயக்குநர் பச்சம் ஈஸ்வர் ரெட்டி தெரிவித்துள்ளார்.
வானியல் சார்ந்த ஆய்வுகளுக்காக டிஎம்டி கட்டமைக்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் முக்கியத்துவம் கருதி, ஹவாய் தவிர வேறு பொருத்தமான இடங்கள் தெரிவு செய்யப்பட்டன. இதில், காஷ்மீர் மாநிலம் லடாக்கும் இடம்பெற்றுள்ளது. லடாக் தவிர, சிலியும் பரிசீலனையில் உள்ளது.
திட்டம் ஒன்றரை முதல் 2 ஆண்டுகள் வரை தாமதமாகிறது. இத்திட்டம் இந்தியாவுக்கு வந்தால், அது பெரும் வாய்ப்புகளை உருவாக்கும். இத்திட்டத்தில் இந்தியா 10 சதவீத கூட்டாளியாக உள்ளது. இந்தியா, சீனா, ஜப்பான், கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகள் இத்திட்டத்தில் இணைந்து செயல்படு கின்றன. இந்திய தரப்பில் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் அணுசக்தி துறை அமைச்சகம் இத்திட்டத்தைக் கையாண்டு வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT