Published : 17 May 2016 11:42 AM
Last Updated : 17 May 2016 11:42 AM
கேரள சட்டப்பேரவைக்கு நேற்று நடைபெற்ற தேர்தலில் அம்மாநில ஆளுநர் பி.சதாசிவம் வாக்களித்தார். இங்கு ஆளுநர் ஒருவர் வாக்களித்தது இதுவே முதன்முறையாகும்.
திருவனந்தபுரத்தில் ஆளுநர் மாளிகைக்கு அருகில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் நேற்று காலை 8.30 மணிக்கு சதாசிவம் வாக்களித்தார். அவருடன் வந்த மனைவி சரஸ்வதியும் வாக்களித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர் களிடம் கூறும்போது, “கேரள ஆளுநர் ஒருவர் தேர்தலில் வாக் களிப்பது இதுவே முதன்முறை. மாநிலத்தின் முதல் குடிமகன் என்ற வகையில், வாக்களிக்க வேண்டி யது எனது கடமை. அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும்” என்றார்.
உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியான சதாசிவம், கடந்த மாதம் கேரள மாநில வாக்காளர் பட்டியலில் தனது பெயரை முதன்முறையாக சேர்த்துக் கொண்டார். இவருடைய வாக்காளர் சீட்டை திருவனந்தபுரம் மாவட்ட ஆட்சியர் பிஜு பிரபாகர் வழங்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT