Published : 27 Jun 2022 08:08 AM
Last Updated : 27 Jun 2022 08:08 AM

'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி சென்னை வீரருக்கு பாராட்டு

புது டெல்லி: 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி சென்னையை சேர்ந்த பளுதூக்குதலில் தங்கம் வென்ற வீரர் குறித்து பேசியுள்ளார்.

ஒலிம்பிக் போட்டிகளில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற இந்தியாவின் நீரஜ் சோப்ரா, சமீபத்தில் பின்லாந்தில் நடந்த சர்வதேச குவார்டேன் போட்டிகளிலும் தங்கம் வென்றுள்ளார். பாவோ நுர்மி போட்டிகளில் வெள்ளி வென்றுள்ளார். இதன்மூலம் மீண்டும் ஒருமுறை நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். இளைஞர்களுக்கான கெலோ இந்தியா போட்டிகளில் பல்வேறு புதிய சாதனைகள் படைக்கப்பட்டன. இந்திய விளையாட்டுத் துறை புதிய அடையாளத்தை பெற்று வருகிறது.

சாதாரண குடும்ப பின்னணியைச் சேர்ந்தவர்கள் விளையாட்டுத் துறையில் சாதனை புரிந்து வருவது பாராட்டுக்குரியது. சென்னையைச் சேர்ந்த தச்சுத் தொழிலாளியின் மகன் தனுஷ், பளுதூக்குதலில் தங்கம் வென்றுள்ளார். இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் இருந்து மிதாலி ராஜ் சமீபத்தில் ஓய்வு பெற்றார். சிறந்த வீராங்கனையான அவர், மற்றவர்களுக்கு உந்து சக்தியாக விளங்குவார். இவ்வாறு பிரதமர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x