Last Updated : 16 May, 2016 10:24 AM

 

Published : 16 May 2016 10:24 AM
Last Updated : 16 May 2016 10:24 AM

பருவமழை தாமதமாக தொடங்கும்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

கேரளாவில் இந்த ஆண்டு தென் மேற்கு பருவமழை வழக்கத்தை விட 3 நாட்களுக்கு முன்பாக மே 28-ம் தேதி தொடங்கும் என தனியார் வானிலை ஆய்வு மையமான ஸ்கைமெட் சமீபத்தில் கணித் திருந்தது.

இந்த அறிவிப்பு கோடை வெப்பத்தால் பாதிக்கப்பட்டிருந்த மக்களுக்கு சற்று மகிழ்ச்சியை ஏற் படுத்தியிருந்தது. இந்நிலையில் கேரளாவில் வழக்கமாக ஜூன் 1-ம் தேதி தொடங்கும் தென்மேற்கு பருவ மழை இந்த ஆண்டு 6 நாட்கள் தள்ளிப் போகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித் துள்ளது.

இது குறித்து இந்திய வானியல் ஆய்வு மைய இயக்குநர் லஷ்மண் சிங் ரத்தோர் கூறியதாவது:பருவ மழை சில நேரங்களில் தாமதமாக தொடங்குவது இயல்பானது தான். இந்த ஆண்டு ஜூன் 7-ம் தேதி பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மழை தாமதமானாலும் கோடை வெப்பத்தால் பாதிப்படைந்துள்ள தென் மாநிலங்களில் அடுத்து வரும் நாட்களில் வெப்ப சலனம் காரண மாக மழை பொழிய வாய்ப்புள்ளது. தற்போது வங்க கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவாகியுள்ளது.

இது தீவிரமடைந்து வருவதால் தமிழகத்தின் கடலோர மாவட்டங் களில் கனமழை பொழியும். இதன் காரணமாக தமிழகம், கர்நாடகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும் கேரளாவின் ஒரு சில பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவும். இவ்வாறு ரத்தோர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x