Published : 15 Jun 2014 02:36 AM
Last Updated : 15 Jun 2014 02:36 AM
முஸ்லிம் சமூகத்தினர் நியாயமாக நடத்தப்படுவார்கள் என நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்ததற்கு முஸ்லிம் அறிஞர்கள் இடம்பெற்ற அமைப்பான முஸ்லிம் ஆய்வு மையம் பாராட்டு தெரிவித் துள்ளது.
இதற்கான தீர்மானம் இந்த மையத்தில் வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி யில் முஸ்லிம் சமூகத்தவர் நியாயத் துடன் நடத்தப்படுவார்கள். அவர் களுக்கு அனைத்து வாய்ப்பு களும் வழங்கப்படும் என பிரதமர் உறுதி கொடுத்துள்ளது முஸ்லிம்கள் மத்தியில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. வகுப்பு வன்முறைகளையும் தீவிர வாதத்தையும் இந்த அரசு சகித்துக்கொள்ளாது என பிரதமர் அறிவித்தது நல்லதொரு அடையாளம்.
பொருளாதாரம் மீண்டெழுவ தற்காக வகுக்கப்பட்டுள்ள திட்டம் நனவாக எல்லா ஒத்துழைப்பையும் இந்த மையம் நல்கும்.
கிடப்பில் உள்ள வகுப்பு வன்முறை தடுப்பு மசோதா நிறைவேற்றப்படுவது மிகவும் முக்கியமானது. வகுப்பு வன்முறை அச்சுறுத்தலுக்கு முடிவு காண அரசு முனைந்தால் அதற்கு இந்த மசோதா நிறைவேற்றப்படுவது இன்றியமையாததாகும்..
முஸ்லிம் கல்வி நிலையங் களான மதரஸாக்களை நவீனப் படுத்திடும் அதே வேளையில் அதன் நிர்வாகத்தில் அரசின் குறுக்கீடு இருக்கக்கூடாது.
ஏழை முஸ்லிம் குடும்பத்தி னருக்கு கல்வி போதிக்கும் பணியை மதரஸாக்கள் மேற் கொள்கின்றன. இந்த ஏற்பாடு பாதிப்புக்கு உள்ளானால் முஸ்லிம்களின் சமூக நிலையை உயர்த்தும் திட்டம் தடைபடும் என அந்த தீர்மானம் வலியுறுத்தியுள்ளது.
பேராசிரியர் ஹூமாயூன் முராட் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. இந்த தகவலை முஸ்லிம் ஆய்வு மையத்தின் செயலா ளர் ஜசீம் முகம்மது நிருபர் களிடம் தெரிவித்தார். சமூ கத்தை பிளவுபடுத்தும் எந்த பிரச் சினையையும் இப் போதைக்கு தவிர்ப்பதுதான் சிறந் தது என்றும் அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT