Published : 24 May 2016 10:30 AM
Last Updated : 24 May 2016 10:30 AM
கேரள மாநில வழக்கறிஞர்கள் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு அமைப்பு (லீப்), தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்தது. அதில், ‘‘மாநிலத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலான டீசல் வாகனங்கள் அதிக புகையை வெளியிடுகின்றன. அதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. அந்த வாகனங்களுக்கு தடை விதிக்க வேண்டும்’’ என்று கோரியிருந்தனர்.
அந்த வழக்கை பசுமை தீர்ப்பாயத்தின் எர்ணாகுளத்தில் உள்ள சிறப்பு பெஞ்ச் விசாரித்தது. பின்னர், ‘‘கேரளாவில் 10 ஆண்டு களுக்கு மேலான பழைய டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்கப் படுகிறது.
இந்த உத்தரவு பிறப் பித்த 30 நாட்களுக்கு மேல் டீசல் வாகனங்கள் இயக்கினால், ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட வேண்டும்’’ என்று நீதிபதி ஜே.சுதந்திரகுமார் உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT