Published : 15 May 2016 12:33 PM
Last Updated : 15 May 2016 12:33 PM
உத்தரப் பிரதேச மாநிலம், முகல்சாராயில் இருந்து, பிஹாரின் பக்சார் நோக்கி நேற்று முன்தினம் இரவு பயணிகள் ரயில் புறப்பட்டது. நள்ளிரவு நேரத்தில் பாணி காமர்பூர் என்ற இடத்தை கடந்தபோது, ஓடும் ரயிலில் 4 பேர் கொண்ட கொள்ளை கும்பல் திடீரென ஏறியது. அத்துடன் ரயில் பயணிகளிடம் இருந்து நகை, பணம் மற்றும் உடைமைகளை மிரட்டி பறிக்க முயன்றது.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அரசு ரயில்வே போலீஸார் அபிஷேக் சிங் மற்றும் நந்தலால் இருவரும், கொள்ளை கும்பலை தடுக்க முயன்றனர். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அந்த கொள்ளை கும்பல் போலீஸார் இருவரையும் நோக்கி துப்பாக்கியால் சுட்டது. இதில் அபிஷேக் சிங்வி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயங்களுடன் உயிர் தப்பிய நந்தலால் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார்.
ரயில் பக்சார் நிலையத்தை அடையும் முன்பாக அதில் ஏறிய கொள்ளை கும்பல் கீழே இறங்கி தப்பியோடியது. முன்னதாக ரயில்வே போலீஸ்காரர் ஒருவரிடம் இருந்து கொள்ளை கும்பல் துப்பாக்கியை பறித்துச் சென்றதாக முகல்சாராய் ரயில்வே போலீஸ் ஆய்வாளர் திரிபுராரி பாண்டே தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT