Published : 01 Apr 2022 08:52 AM
Last Updated : 01 Apr 2022 08:52 AM

நீதிமன்ற உத்தரவுகள் விரைந்து கிடைக்க ‘ஃபாஸ்டர்’ புதிய மென்பொருளை அறிமுகம் செய்தார் தலைமை நீதிபதி

புதுடெல்லி: நீதிமன்ற உத்தரவுகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விரைந்து கிடைக்க, ‘ஃபாஸ்டர்’ என்ற புதியமென்பொருளை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி நேற்று அறிமுகம் செய்தார்.

ஜாமீன் உட்பட பல்வேறு வழக்குகளில் நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சென்றுசேருவதில் கால தாமதம் ஆவதாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் செய்தித் தாளில் விரிவான கட்டுரை ஒன்று வெளியானது. அதை கவனத்தில் எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், மின்னணு தொழில்நுட்பம் மூலம் ஜாமீன் உட்பட பல்வேறு வழக்குகளில் நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகள் அதிகாரிகளை விரைந்து சென்று சேரும் வகையில் ‘ஃபாஸ்டர்’ (Faster) என்ற மென்பொருளை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா நேற்று அறிமுகம் செய்து வைத்து பேசியதாவது:

ஜாமீன் கோரும் வழக்குகளில் நீதிமன்றங்கள் ஜாமீன் வழங்கி உத்தரவிட்ட பிறகும், கைதிகள் விடுதலையாவதில் கால தாமதம் ஏற்படுவதாக செய்திகள் வெளியாயின. அதை கருத்தில் கொண்டு ‘ஃபாஸ்டர்’ என்ற மென்பொருள் அறிமுகம் செய்யப் பட்டுள்ளது. இந்த மென்பொருள் மூலம் நீதிமன்ற உத்தரவுகள் பாதுகாப்பாக விரைந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சென்று சேரும்.

இந்த மென்பொருள் மூலம் சிறைத் துறை அதிகாரிகள் உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நீதிமன்ற உத்தரவுகள் விரைந்து கிடைக்கும். நீதிமன்ற உத்தரவு கிடைப்பதற்காக இனிமேல் காத் திருக்கும் நிலை ஏற்படாது.

முன்னதாக இதுகுறித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், ஹேமந்த் குப்தா மற்றும் பிற நீதிபதிகளுடன் கலந்தாலோசித்து முடிவெடுத்தோம். உச்ச நீதிமன் றம், உயர் நீதிமன்றங்கள் இனிமேல் பிறப்பிக்கும் உத்தரவுகள் இந்த மென்பொருள் வழியாகபாதுகாப்பாக சம்பந்தப்பட்டவர்களுக்குப் பகிரப்படும்.

இந்த திட்டத்தை அமல்படுத்த உயர் நீதிமன்றங் களில் அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா கூறினார்.

- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x