Published : 30 Apr 2016 10:12 AM
Last Updated : 30 Apr 2016 10:12 AM
அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத் தில் 2 பேர் உயிரிழக்கக் காரண மான வன்முறை சம்பவம் தொடர் பாக 12 மாணவர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் அலிகர் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் கடந்த சனிக்கிழமை இரு அணியாக பிரிந்து மோதிக் கொண்டதில், 2 பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப் பட்டனர். இந்த வன்முறையில் பல் கலைக்கழக வளாகத்தில் தனி பாது காப்பு அதிகாரியின் அலுவலகம் சூறையாடப்பட்டது. சில வாகனங் கள் தீக்கிரையாக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து அதி விரைவுப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்த வன்முறையில் தொடர் புடையதாகக் கூறி, 12 மாணவர் களை பல்கலைக்கழக ஒழுங்கு நட வடிக்கை குழு இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. அந்த மாணவர் கள் உடனடியாக விடுதி அறை களைக் காலி செய்யவும் உத்தர விடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT