Published : 08 Feb 2022 06:29 AM
Last Updated : 08 Feb 2022 06:29 AM

திருமண குழுவினர் சென்ற கார் விபத்தில் 9 பேர் உயிரிழப்பு

கோப்புப்படம்

அனந்தபூர்: ஆந்திர மாநிலம், உரவ கொண்டா மண்டலம், நிம்பகல்லா பகுதியை சேர்ந்தவர் வெங்கடப்ப நாயுடு. இவர் ஆந்திர பாஜக கிசான் மோர்ச்சா உறுப்பினராக உள்ளார். இவரது மகள் பிரசாந்தியின் திருமணம் கர்நாடக மாநிலம் பெல்லாரியில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

திருமணத்தை முடித்துக் கொண்டு வெங்கடப்ப நாயுடு உள்ளிட்ட 9 பேர் நேற்று முன்தினம் இரவு காரில் உரவகொண்டா திரும்பிக் கொண்டிருந்தனர். இவர்கள் வீட்டை சென்றடைவதற்கு சற்று முன்பாக, பூதகவி என்ற இடத்தில், எதிரே வேகமாக வந்த லாரி இவர்களின் கார் மீது மோதியது. இந்தக் விபத்தில் வெங்கடப்ப நாயுடு உள்ளிட்ட 2 ஆண்கள், 6 பெண்கள் ஒரு சிறுவன் என மொத்தம் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து உரவ கொண்டா போலீஸார் விசாரிக்கின்றனர். இறந்தவர்களின் குடும் பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, தலா ரூ. 2 லட்சம் உதவித் தொகை வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x