Published : 26 Jan 2022 12:15 PM
Last Updated : 26 Jan 2022 12:15 PM

பாகிஸ்தானிலிருந்து காஷ்மீரில் ஊடுருவ 135 தீவிரவாதிகள் காத்திருப்பு - பிஎஸ்எப் ஐஜி

ஸ்ரீநகர்: பாகிஸ்தானில் இருந்து காஷ்மீருக்குள் ஊடுருவ 135 தீவிரவாதிகள் காத்திருப்பதாக எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எப்) ஐஜி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து காஷ்மீர் எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எப்) ஐஜி ராஜபாபு சிங் நேற்று நகரில் கூறியதாவது: பாகிஸ்தானில் இருந்து இந்தியப் பகுதிக்குள் ஊடுருவ காஷ்மீர் எல்லையில் 135 தீவிரவாதிகள் காத்திருப்பதாகவும் குடியரசு தினத்தன்று தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.. ராணுவம் மற்றும் பிஎஸ்எப் படையினருக்கு இடையே ஒத்துழைப்பு சுமூகமாக உள்ளது. யாராவது தீவிரவாதிகள் இந்திய எல்லையை கடந்து உள்ளே புகுந்து, தாக்குதல் நடத்தினால் அவர்கள் சுட்டுக் கொல்லப்படுவார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.

ஜம்மு பகுதி பிஎஸ்எப் ஐஜி டி.கே.பூரா கூறும்போது, ‘‘குடியரசுதினத்தன்று தேசத்துக்கு எதிரான சக்திகள் குழப்பத்தை உருவாக்க முயற்சி செய்யும் என தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, இந்தியா- பாக். எல்லையை தீவிரமாக கண்காணித்து வருகிறோம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x