Published : 29 Apr 2016 10:06 AM
Last Updated : 29 Apr 2016 10:06 AM
பெங்களூருவில் உள்ள பையப்பனஹள்ளியில் இருந்து நாயண்டஹள்ளி வரையிலான 18 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற் றது. இப்பாதையில் கப்பன் பூங்கா வில் இருந்து மாகடி சாலை வரை 5.12 கி.மீ. தூரத்துக்கு பூமிக்கு அடியில் சுரங்க பாதை அமைக்கப் பட்டுள்ளது. இந்த பாதையில் 5 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ரூ. 500 கோடி மதிப்பில் நடை பெற்ற பணிகள் முடிக்கப்பட்டு, மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா இன்று மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. ரயில் சேவையை கர்நாடக முதல்வர் சித்தராமையா தொடங்கி வைக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT