Published : 07 Jan 2022 08:07 AM
Last Updated : 07 Jan 2022 08:07 AM

சித்தரஞ்சன் புற்றுநோய் மைய வளாகத்தை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

புதுடெல்லி: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் அமைந்துள்ள சித்தரஞ்சன் புற்றுநோய் மையத்தின் இரண்டாவது வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கவுள்ளார்.

கொல்கத்தாவில் உள்ள சித்தரஞ்சன் தேசிய புற்றுநோய் மையத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனர். நாளுக்கு நாள் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் இந்த புற்றுநோய் மையத்தை விரிவுப்படுத்த வேண்டும் என மேற்கு வங்க அரசும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை ஏற்று மேற்கு வங்க அரசின் பங்களிப்புடன் ரூ.530 கோடி செலவில் அந்த மையத்தில் இரண்டாவது வளாகத்தை மத்திய அரசு தற்போது கட்டியுள்ளது. 460 படுக்கைகளுடன் புற்றுநோய் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் அந்த வளாகத்தில் உள்ளன.

இந்நிலையில், இந்த வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி காணாெலி வாயிலாக இன்று தொடங்கி வைக்கவுள்ளதாக பிரதமர் அலுலவகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x