Published : 16 Mar 2016 09:23 AM
Last Updated : 16 Mar 2016 09:23 AM
ஆந்திர சட்டப் பேரவைத் தலைவர் கோடல சிவபிரசாத் மீது எதிர்க்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது.
ஆந்திர பேரவைத் தலைவர் கோடல சிவபிரசாத் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக எதிர்க்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் நேற்று நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இதனை எதிர்த்து 97 , ஆதரித்து 57 வாக்குகளும் பதிவாயின. ஒய்எஸ்ஆர் காங்கிரஸில் இருந்து தெலுங்கு தேசம் கட்சிக்கு தாவிய 8 எம்எல்ஏக்கள் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ள வில்லை.
ஓராண்டு இடை நீக்கம் செய்யப்பட்ட நடிகை ரோஜாவும் இதில் கலந்து கொள்ளவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT