Published : 30 Dec 2021 06:55 AM
Last Updated : 30 Dec 2021 06:55 AM
கர்நாடகாவில் மதமாற்றத்தை தடுக்க கடந்த வாரம் மதமாற்ற தடை சட்ட மசோதாவை சட்டப் பேரவையில் அரசு நிறை வேற்றியது. இதற்கு காங்கிரஸ், மஜத, இந்திய குடியரசுக் கட்சிஆகியவை எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கிறிஸ்துவம், முஸ்லிம்மத அமைப்பினரும், இடதுசாரி தொழிற்சங்கத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், ஹாசன் மாவட்டம் நிட்டூரை சேர்ந்த 50 பட்டியலின இளைஞர்கள், மசோதாவை கண்டித்து இந்து மதத்தில் இருந்து பவுத்த மதத்துக்கு மாறினர். இதுகுறித்து அம்பேத்கரிய செயற்பாட்டாளர் சுவாமி நிட்டூர் கூறியதாவது:
இந்து மதத்தில் பட்டியலினத் தவர்கள் சாதி ரீதியாக ஒடுக்கப் படுவதால் அம்பேத்கர் 1956-ம் ஆண்டு பவுத்தத்தை தழுவினார். நாங்கள் இந்துக்களாக இருந்த போது தீண்டாமை கடைபிடித்து, கோயிலுக்குள் அனுமதிக்க மறுத்தனர். நாங் கள் இப்போது சுதந்திரமாக உணர்கிறோம். எங்களை பின்பற்றி ஆண்டுதோறும் அம்பேத்கரின்பிறந்த நாளான ஏப்ரல் 14-ம்தேதி நிறைய பேர் பவுத்தத்துக்கு திரும்புகின்றனர். எங்கள் செயல்பாட்டால் கோபமடைந் துள்ள பாஜக, மதமாற்ற தடை சட்ட மசோதாவை கொண்டு வந்துள்ளது.
அரசியலமைப்புச் சட்டம், விரும்பிய மதத்தைத் தேர்ந் தெடுக்க சுதந்திரம் அளித்துள்ளது. அதனை யாரும் தடுக்க முடியாது.
இவ்வாறு நிட்டூர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT