Published : 29 Dec 2021 06:23 AM
Last Updated : 29 Dec 2021 06:23 AM

கரோனாவால் பெற்றோரை இழந்த 3,481 சிறார்களுக்கு பிஎம் கேர்ஸ் திட்டம் மூலம் சலுகைகள்

நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று பிரச்சினையால் பாதிக்கப்பட்டு தாய், தந்தை இருவரையும் இழந்த சிறுவர்களுக்கு மத்திய அரசு தனது பிஎம் கேர்ஸ் நிதி மூலம் உதவும் என அறிவித்திருந்தது.

இதையடுத்து அந்த சலுகைகளைப் பெற மொத்தம் 6,098 விண்ணப்பங்கள் வந்திருந் தன. இதில் 3,481 சிறுவர்களின் விண்ணப்பங்களை அங்கீகரித்து பிஎம் கேர்ஸ் நிதியின் சலுகைகள் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:

மாவட்ட ஆட்சியர்களின் மூலம் மொத்தம் 6,098 விண்ணப்பங்கள் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறைக்கு வந்திருந் தன. இதில் 3,481 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவர் களுக்கு சலுகைகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அவர்கள் பெயரில் அஞ்சல கங்களில் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. அந்தக் கணக்குகள் மூலம் அந்த சிறுவர்களுக்குத் தேவையான நிதி உதவி உள்ளிட்ட சலுகைகளை மத்திய அரசு வழங்கும்.

விடுதியில் உள்ள குழந்தைகளுக்கு மாதம்தோறும் ரூ.2,160-ம், விடுதியில் இல்லாத குழந்தைகளுக்கு மாதம்தோறும் ரூ.2,000-ம் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x