Published : 20 Dec 2021 07:48 AM
Last Updated : 20 Dec 2021 07:48 AM

காஷ்மீரில் தீவிரவாதத்தை தொடர்ந்து தூண்டும் பாகிஸ்தான்: போலீஸ் ஐ.ஜி. விஜயகுமார் குற்றச்சாட்டு

ஸ்ரீ நகர்: காஷ்மீரின் ஸ்ரீநகர் ஹர்வான் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி யிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அந்தப் பகுதியை போலீஸார் நேற்று சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது,பதுங்கியிருந்த பாகிஸ்தான் தீவிரவாதி சபியுல்லா என்றஅபுகாலித் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இவர் பாகிஸ்தானின் கராச்சிபகுதியைச் சேர்ந்தவர் என்றும்லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதி என்றும் போலீஸார் தெரிவித்தனர். காஷ்மீரில் பல்வேறு குண்டுவெடிப்பு கள், தீவிரவதச் செயல்களில் சபியுல்லாவுக்கு தொடர்பு இருப்பதும் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து காஷ்மீர் போலீஸ் ஐ.ஜி. விஜயகுமார் கூறுகையில், ‘‘கடந்த 33 நாட்களில் நகர் பகுதியில் பாகிஸ்தான் தீவிர வாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்த 3 தீவிரவாதிகளும் போலீஸார் மற்றும் பாதுகாப்புப் படையினர் மீது நடந்த தாக்குதல்கள், அப்பாவி பொதுமக்கள் படுகொலை என்று பல்வேறு தீவிரவாதச் செயல்களில் தொடர்புடையவர்கள். ஒரே மாதத்தில் 3 பாகிஸ்தான் தீவிரவாதிகள் கொல்லப் பட்டிருப்பதன் மூலம் காஷ்மீரில் தீவிரவாதத்தை பாகிஸ்தான் தொடர்ந்து தூண்டிவிடுகிறது என்பது தெரியவந்துள்ளது’’ என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x