Published : 20 Dec 2021 07:48 AM
Last Updated : 20 Dec 2021 07:48 AM
ஸ்ரீ நகர்: காஷ்மீரின் ஸ்ரீநகர் ஹர்வான் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி யிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அந்தப் பகுதியை போலீஸார் நேற்று சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது,பதுங்கியிருந்த பாகிஸ்தான் தீவிரவாதி சபியுல்லா என்றஅபுகாலித் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இவர் பாகிஸ்தானின் கராச்சிபகுதியைச் சேர்ந்தவர் என்றும்லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதி என்றும் போலீஸார் தெரிவித்தனர். காஷ்மீரில் பல்வேறு குண்டுவெடிப்பு கள், தீவிரவதச் செயல்களில் சபியுல்லாவுக்கு தொடர்பு இருப்பதும் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து காஷ்மீர் போலீஸ் ஐ.ஜி. விஜயகுமார் கூறுகையில், ‘‘கடந்த 33 நாட்களில் நகர் பகுதியில் பாகிஸ்தான் தீவிர வாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்த 3 தீவிரவாதிகளும் போலீஸார் மற்றும் பாதுகாப்புப் படையினர் மீது நடந்த தாக்குதல்கள், அப்பாவி பொதுமக்கள் படுகொலை என்று பல்வேறு தீவிரவாதச் செயல்களில் தொடர்புடையவர்கள். ஒரே மாதத்தில் 3 பாகிஸ்தான் தீவிரவாதிகள் கொல்லப் பட்டிருப்பதன் மூலம் காஷ்மீரில் தீவிரவாதத்தை பாகிஸ்தான் தொடர்ந்து தூண்டிவிடுகிறது என்பது தெரியவந்துள்ளது’’ என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT