Published : 11 Mar 2016 04:07 PM
Last Updated : 11 Mar 2016 04:07 PM
காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் உயர் பகுதிகளுக்கு ‘நடுநிலை அபாய’ பனிச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பனிச்சரிவு ஆய்வு மையம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. எனவே பொதுமக்கள் அடுத்த 48 மணிநேரங்களுக்கு பனிச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
காஷ்மீரில் பாரமுல்லா, குப்வாரா, பாந்திபூர், கார்கில், ஷொபியான், அனந்த்நாக், குல்காம், ரஜவ்ரி, தோடா மற்றும் பூஞ்ச் மாவட்டங்களின் 3,000 மீட்டர்களுக்கு மேல் உள்ள பகுதிகளுக்கு நடுநிலை பனிச்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதே போல் இமாச்சலில் லாஹால்-ஸ்பிதி, குல்லு, சம்பா, கின்னவ்ர் மாவட்டங்களின் 3,000 மீட்டர்களுக்கும் உயரமான பகுதிகளில் பனிச்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதே போல் உத்தராகண்டின் சமோலி, உத்தரகாசி, ருத்ரபிரயாக், பிதோரகார் ஆகிய பகுதிகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் பார்கியான் மற்றும் ஹதான் தாஜ் பகுதியில் பனிப்பொழுவு முறையே 2 செமீ மற்றும் 5 செமீ. அதேபோல் காஷ்மீர், இமாச்சலத்தின் சில பகுதிகளில் நல்ல மழையும் பெய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT