Published : 05 Dec 2021 08:55 PM
Last Updated : 05 Dec 2021 08:55 PM

இந்தியாவில் ஒரே நாளில் 17 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு: எண்ணிக்கை 21 ஆக உயர்வு

பிரதிநிதித்துவப் படம்

omicron

இந்தியாவில் இன்று ஒரே நாளில் 17 பேர் ஒமைக்ரான் வகை வைரஸ் தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளார் இதையடுத்து ஒமைக்ரான் பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் உருவாகி உலக அளவில் அச்சத்தை ஏற்படுத்திவரும் கரோனா வைரஸின் உருமாற்றமான ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவிலும் கண்டறியப்பட்டது. கர்நாடக மாநிலத்தில் இருவருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.

இவர்களுடன் தொடர்பில் இருந்த முதல் நிலைத் தொடர்பாளர்கள், 2-ம் நிலைத் தொடர்பாளர்கள் கண்டறியப்பட்டு ஏறக்குறைய 500 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் 46 வயதான மருத்துவர், மற்றொருவர் 66 வயதானவர்.

ஒமைக்ரான் பாதிப்பு எவ்வாறு இருக்கும், வேகமாகப் பரவுமா, உயிரிழப்பை அதிகம் ஏற்படுத்துமா என்பது குறித்து இதுவரை எந்த இறுதியான தகவலும் இல்லை.

தொடர்ந்து நேற்று ஜிம்பாப்வேயில் இருந்து குஜராத்தின் ஜாம்நகருக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு வந்தவருக்கு கோவிட் உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து, தென்னாப்பிரிக்காவில் இருந்து மகாராஷ்டிரா திரும்பிய 33 வயது நிரம்பிய ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் இந்தியாவில் நேற்று வரை ஒமைக்ரான் பாதிப்பு 4 ஆக இருந்தது.

பின்னர் தான்சானியாவில் இருந்து டெல்லி திரும்பிய ஒருவருக்கு இன்று ஒமைக்ரான் தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்தது.

இந்தநிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் 7 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி படுத்தப்பட்டுள்ளது என மாநில சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

நைஜீரியாவில் இருந்து புனே அருகே உள்ள பிம்ப்ரி-சின்ச்வாட் நகருக்கு வந்த 44 வயது பெண், அவரது உறவினர்களுக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானது. அதுபோலவே கடந்த மாதம் ஃபின்லாந்திற்குச் சென்ற 47 வயதான ஒருவருக்கும் புதிய ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது.

இதுபோவே ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேருக்கு ஒமைக்ரான் வரை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகதார துறை தெரிவித்துள்ளது. இதுவரை இந்தியாவில் ஒமைக்ரான் வகை தொற்று பாதிப்புக்கு 21 பேர் உள்ளாகி உள்ளனர். இதனையடுத்து அவர்களுடன் தொடர்புடையவர்களையும் தடமறியும் முயற்சியும் நடைபெற்று வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x