Last Updated : 25 Oct, 2021 10:04 AM

 

Published : 25 Oct 2021 10:04 AM
Last Updated : 25 Oct 2021 10:04 AM

இந்தியாவில் புதிதாக மேலும் 14,306 பேருக்கு கரோனா தொற்று: 443 பேர் பலி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14,306 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 306 பேர் உயிரிழந்தனர்.

கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 14306. இது அதற்கு முந்தைய நாளைவிட 10% குறைவானது. இதில் கேரளாவில் மட்டும் 8,538 பேருக்கு தொற்று உறுதியானது.

இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 3,41,89,774.

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 18,762.

இதுவரை குணமடைந்தோர்: 3,35,67,367.

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 443.இதில் கேரளாவில் மட்டும் 363 பேர் உயிரிழந்தனர்.

கரோனா மொத்த உயிரிழப்புகள்: 4,54,712.

சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 1,67,695. இது கடந்த 239 நாட்களில் இல்லாத அளவுக்குக் குறைவு.

இதுவுரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர்: 102.27 கோடி. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 12,30,720 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் 98.18% ஆக அதிகரித்துள்ளது.

பாசிடிவிட்டி ரேட் என்பது 100 பேரில் எத்தனை பேருக்கு தொற்று இருக்கிறது என்பதன் அளவீடு.

வாரந்திர பாசிடிவிட்டி ரேட் 1.24% ஆக உள்ளது. இது கடந்த 31 நாட்களாக 2% க்கும் கீழ் உள்ளது. தினசரி பாசிடிவிட்டி ரேட் 1.43% ஆக உள்ளது. இது கடந்த 21 நாட்களாக 2% க்கும் கீழ் உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x