Published : 05 Oct 2021 02:01 PM
Last Updated : 05 Oct 2021 02:01 PM

ட்ரோன் மூலம் கரோனா தடுப்பூசி விநியோகம்: பரிசோதனை அடிப்படையில் தொடக்கம்

புதுடெல்லி

மணிப்பூரில் ட்ரோன் மூலம் கரோனா தடுப்பூசி விநியோக செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மணிப்பூர், நாகாலாந்து, அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளுக்கு தற்போது ட்ரோன் மூலம் கரோனா தடுப்பூசிகள் விநியோகிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஆரம்ப கட்ட ஆய்வை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கான்பூர் ஐஐடியுடன் இணைந்து மேற்கொண்டது.

மணிப்பூரில் ட்ரோன் மூலம் கரோனா தடுப்பூசி விநியோகம் செய்ய பரிசோதனை அடிப்படையில் நடவடிக்கை தொடங்கியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இதனை தொடங்கி வைத்தார்.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ட்ரோன், முதல் முறையாக, தெற்கு ஆசியாவில் கோவிட் தடுப்பூசியை 15 கி.மீ தூரத்துக்கு 12 முதல் 15 நிமிடங்களில் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டுள்ளது.

மணிப்பூரின் விஷ்ணுபூர் மாவட்ட மருத்துவமனையில் இருந்து கரங் தீவில் உள்ள லோதக் ஏரி பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்துக்கு கரோனா தடுப்பூசிகள் கொண்டு செல்லப்பட்டன. இந்த இடங்களுக்கு சாலை வழியான தூரம் 26 கி.மீ. லோதக் ஏரியில் 10 பேர் முதல் டோஸ் தடுப்பூசிகளையும், 8 பேர் 2வது டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டது.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x